யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடந்த 2 ஆம் திகதி எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இரண்டு இறப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் எலிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டு 10 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்றையதினம் (04-01-2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.