கம்பஹா (Gampaha) பேருந்து நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவம் இன்று (15) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள், சிறிய லொறி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

மேலதிக விசாரணை

எனினும், குறித்த லொறியில் பயணித்த இருவரும் வாகனத்தில் இருந்து இறங்கி அருகிலுள்ள கடைக்கு ஓடியுள்ளனர்.

சற்றுமுன் தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு | Gun Shooting In Southern Sri Lanka

துப்பாக்கிச் சூட்டில் அவர்களுக்கு காயம் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *