பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் (University of Jaffna) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்றைய தினம் (18) பொங்குதமிழ்ப் பிரகடன பொதுநினைவுத் தூபியில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையினால் குறித்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாணவர் ஒன்றியம்
இதையடுத்து, பிரகடன உரையினை தொடர்ந்து பொங்குதமிழ் தூபிக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.

இதில் மாணவர்கள் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
தமிழ் மக்களின் அபிலாஷைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித்தாயகம் ,தமிழ்த்தேசியம் என்பன அங்கீகரிக்கப்படவேண்டும் என பொங்குதமிழ் பிரகடனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொள்ளுங்கள்…! |