![](https://www.temlnews.net/wp-content/uploads/2024/08/24-66cb6e7937b2e.jpg)
ஹபரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலுகஸ்வெவ பிரதேசத்தில் கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.